உங்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையா இருக்கா?? – 3 நாளில் எளிய பரிகாரம்!!

0
amman
amman

வாழ்க்கையில் யாரை கேட்டாலும் பிரச்சனை பிரச்சனை தான். எந்த பக்கம் சென்றாலும் பிரச்சனை தான் எனும்போது ஒரு மனிதனால் என்ன தான் செய்ய முடியும். இதற்கு சில பரிகாரங்கள் மூலம் மன கவலைகள் பிரச்சனைகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

பிரச்சனைகள்

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மனஅழுத்தம், கவலை, அதிகப்படியான மனஉளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் பழக்க வழக்கங்கள் தான். பள்ளி மாணவர்கள் கூட தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை சில பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

பரிகாரங்கள்

இந்த பரிகாரத்திற்கு பெரிய பூஜைகளோ அல்லது அதிக செலவுகளோ ஏற்படாது. வேப்பிலை மட்டுமே போதுமானது. கவேப்பிலையை எடுத்து தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் அதனை காய வைத்து எடுத்துக்கொள்ளவும். அதனை மஞ்சளை துணியில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பூஜையறையில் எடுத்து சென்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

vepilai
vepilai

அதாவது தெரிந்தோ தெரியாமலோ எதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எனது துன்பங்களை நான் மனதார ஏற்றுக்கொண்டேன். இதற்கு மேல் என்னிடம் தைரியம் இல்லை என்று கூறி வழிபடுங்கள். பின்பு அதனை துணியால் கட்டி தலைமாட்டில் 3 நாட்கள் வைத்து தூங்குங்கள். அந்த தலையணையை மூன்று நாட்களுக்கு எடுக்க கூடாது. மேலும் தீட்டு படாமல் பார்த்துக்கொள்ளவும்.

praying-god
praying-god

அதன்பின் 3 நாட்கள் கழித்து அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று இதை வைத்து கும்பிடவும்.உங்களால் முடிந்ததை காணிக்கையாக செலுத்துங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் மனம் தைரியமடையும். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படுவதை பார்ப்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here