மீதமான இட்லியில் சூப்பரான வடை – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
மீந்து போன இட்லியில் வடை
மீந்து போன இட்லியில் வடை

இட்லி அனைத்து வயதினரும் சாப்பிட கூடிய உணவு ஆகும். இட்லி நீராவியில் வேகவைக்கும் உணவு என்பதால் இது உடலுக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. மேலும் இது ஒரு எளிதான ஆகாரம் என்று கூட சொல்லலாம். ஏன்னெனில் உடல் நிலை சரியில்லாதவர்கள் கூட இந்த இட்லியை தான் சாப்பிடுவர். மருத்துவரின் பரிந்துரையும் இதுவாக தான் இருக்கும். ஆனால் இந்த இட்லி மீதமாகும் போது அதனை கீழே கொட்டாமல் சூப்பரான வடை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • இட்லி – 3
  • உருளைக்கிழங்கு – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • அரிசிமாவு – 3 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • பிரட் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இட்லியை ஒரு நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து உதிர்த்துக்கொள்ளவும். பிறகு அதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், அரிசி மாவு கொத்தமல்லி தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்(தண்ணீர் சேர்க்காமல் பிசைய வேண்டும்).

vadai
vadai

மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது அந்த மாவினை உருட்டி உளுந்து வடை போல தட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு பிரட் துகள்களை ஒரு தட்டில் போட்டு வடை போல தட்டி வைத்துள்ள மாவை அதில் பிரட்டி சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான வடை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here