டீ குடிக்கும் பழக்கத்திற்கு பல பேர் அடிமை என்றே சொல்லலாம். தலைவலி, மன அழுத்தம், கவலை எது வந்தாலும் டீ குடிப்பதையே நாம் வழக்கமாக வைத்துள்ளோம். எந்த இடைவெளி வந்தாலும் சரி அதனை நிரப்ப இந்த டீ தேவைப்படுகிறது. இப்பொழுது வித்தியாசமான முறைகளில் தந்தூரி டீ என கடைகளில் கிடைக்கிறது. அந்த தந்தூரி டீயை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- பால் – 1/2 லிட்டர்
- டீ தூள் – 2 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
- இஞ்சி – சிறிது
- ஒரு சிறிய மண் பானை
- சர்க்கரை – உங்கள் சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் டீ தூள், சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் தட்டிய இஞ்சி போன்றவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்பொழுது ஒரு சிறிய மண் குவளையை எடுத்து 20 நிமிடங்கள் நெருப்பில் காட்டவும். அதன் பிறகு கீழே ஒரு பௌளை வைத்து அதன்மேலே இந்த சூடான மண்குவளையை பிடித்து அதில் இந்த டீயை ஊற்ற வேண்டும்.
இப்பொழுது ஊற்றும் போதே டீ நுரையுடன் வெளியேறும் அதற்காக தான் அடியில் ஒரு பௌளை வைக்க வேண்டும். இப்பொழுது இதனை டம்ளரில் ஊற்றி குடித்தால் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியமானதும் கூட டீயை விரும்பி குடிக்காதவர்கள் கூட விரும்பி குடிக்கும் அளவிற்கு இதன் சுவை இருக்கும்.