முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர சூப்பரான ஹேர்மாஸ்க் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0

நாம இப்போ பாக்கபோறது ஒரு சூப்பரான ஹேர் மாஸ்க் மருதாணி ஹேர்மாஸ்க். இந்த ஹேர்மாஸ்க் நம்ம முடியை ரொம்ப அழகா மாத்திடும். இது மட்டும் இல்ல ஹேர் கலர் ஆகவும் அடர்த்தியா, பளபளப்பாகவும் இருக்கும். உங்களுக்கு தலையில முடியே இல்லாத மாதிரி தோணுதா இந்த ஹேர்மாஸ்க் உபயோகப்படுத்தி பாருங்க நீங்களே அசந்து போவீங்க. வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • மருதாணி பொடி – 5 டீ ஸ்பூன்
  • தயிர் – தேவையான அளவு
  • டீ தூள் – 2 டீ ஸ்பூன்
  • எலுமிச்சை – 1/2
  • முட்டை – 1

தயார் செய்யும்முறை:

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் 250மிலி தண்ணீர் ஊற்றி நன்றாக கொத்தித்தவுடன் அதில் இரண்டு ஸ்பூன் டீ தூல சேர்த்து தண்ணீர் பாதி வரும் வரை வேக விடவும். பின் ஒரு இரும்பு பாத்திரத்தில் அல்லது கிராமகளில் இருப்புச்சட்டி என்று சொல்லப்படும் சட்டியில் வடிகட்டி அதனுள் மருதாணி பொடி சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாளில் காலையில் பார்த்தல் கருப்பு நிறமாகவும், பேஸ்ட் போன்றும் மாரி இருக்கும். அதனுள் முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கவும்.

தலையை சுத்தமாக அலசி எண்ணெய் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இப்பொழுது, முடியை சிறு சிறு பாகங்களாக பிரித்துக்கொண்டு மருதாணி கலவையை தேய்க்கவும். பின் தலையை ஹேர்கவர் கொண்டு மூட வேண்டும். 45 நிமிடம் கழித்து ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் முடியை அலச வேண்டும். நன்றாக காய்ந்தபின் முடி பட்டு போன்று, அடர்த்தியாகவும் அழகாவும் இருக்கும். முடி வறட்சியாக இருப்பவர்கள் இந்த ஹேர்மாஸ்க் பயன்படுத்தினால் பார்லரில் ஹேர்கலர் செய்வது போன்று அழகாக இருக்கும். குறிப்பு: இயற்கையான மருதாணி பொடியை பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here