பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து உட்கொண்டார் என, சக வீரர் சர்பராஸ் நவாஸ் குற்றம் சட்டி உள்ளார்.
கஞ்சா புகைத்தார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 68. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனான இவருடன், வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் விளையாடி உள்ளார். 1970,80ம் ஆண்டுகளில் இவர்கள் விளையாடிய நேரத்தில் நடந்த விஷயம் குறித்து சர்பராஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சேனல் ஒன்றுக்கு சர்பராஸ் அளித்த பேட்டியில்,’ பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய நாட்களில், இம்ரான் அடிக்கடி கஞ்சா புகைத்தார். 1987ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சரியாக செயல்படவில்லை. பின், லண்டனில் போதை பொருளை பயன்படுத்தினர். நாடு திரும்பிய பின், இஸ்லாமாபாத்தில் எனது வீட்டில் சக வீரர்களான மொசின் கான் உள்ளிட்டோருடன் இணைந்து கஞ்சா புகைத்தார். ஏதாவது சாப்பிட்டு விட்டு, நன்றாக தூங்கி விடுவார். இவை அனைத்தும் என்னை போல, இன்னும் சிலருக்கு தெரியும்,’ என தெரிவித்தார்.