ஒருவர் பிறக்கும் போது அவரின் நேரத்தை குறித்து தான் ஜாதகம் எழுதப்படும். சிலருக்கு இதில் அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் ஒருவரின் வாழ்கை, எதிர்காலம் என அனைத்தையும் கூறுவது இந்த ஜாதக அமைப்பு தான். ஜாதகத்தில் லக்கினத்தை குறிப்பிட்டே அவரின் தோற்றம், உடல் அமைப்பு அமைந்திருக்கும்.
லக்கினம்
லக்கினம் என்பது ஜாதகத்தில் நாம் வைத்து கணிப்பது. 12 கட்டங்களில் நம் ஜனனத்தை பொறுத்தே லக்கினம் அமைகிறது. மேலும் லக்னத்தில் அமர்ந்திருப்பவர்கள் பொறுத்தே நம் அழகு, உடல்வாகு, தோற்றம் அமைந்திருக்கும். அதாவது நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது, குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்றவர்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் நமது தோற்றம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
சூரியன்
லக்கினத்தில் சூரியன் இருந்தால் பிரகாசமான உடலமைப்பை பெற்றுருப்பார். நல்ல அழகு, நிறத்தை பெற்றிருப்பார். மேலும் சுறுசுறுப்பாகவும், கம்பீர தோற்றத்துடனும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் உடல் எப்பொழுதும் அதிக உஷ்ண நிலையிலேயே இருக்கும்.
சந்திரன்
சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் உடலமைப்பு நன்றாக இருக்கும். பேசுவதிலும், பழகுவதும் அன்பாக இருக்கும். பார்ப்பவர்கள் எளிதில் மயங்கும் அழகான தோற்றத்தை பெற்றிருப்பார்.
செவ்வாய்
செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் நல்ல ஆரோக்கியமாகவும், உறுதியான உடலமைப்பையும் பெற்றிருப்பர். எதிலும் துணிந்து செயல்படும் குணம் இருக்கும். இவர்கள் கோவத்தை கட்டுப்படுத்துவது கடினமான காரியம்.
புதன்
லக்கினத்தில் புதன் அமர்ந்திருந்தால் அதி புத்திசாலியாக இருப்பார். பார்க்கும்போதே அவர்கள் மீது மரியாதையை தோன்றும் அளவுக்கு அவர்களின் உருவ அமைப்பு இருக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் உடையவராக இருப்பார்.
சுக்கிரன்
சுக்ரன் லக்கினத்தில் இருந்தால் கவர்ச்சியான அழகு கொண்டவாகவும், அதிக திறமை படைத்தவராகவும் இருப்பார். வசதி வாய்ப்புகளுடன் வாழ்வர். தைரியம் துணிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
சனி
லக்கினத்தில் சனி இருந்தால் சற்று கருப்பான தோற்றத்தை பெற்றிருப்பர். இவர்களுக்கு சோம்பறி தனம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு உடல்நிலையில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்.
ராகு
லக்கினத்தில் ராகு இருப்பவர்கள் சோம்பலாக காணப்படுவார்கள். அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. மேலும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் இவர்களுக்கு அடிக்கடி வர கூடும்.
கேது
கேது லக்கினத்தில் அமர்வதால் புத்திசாலியாக இருப்பார். கருப்பான தோற்றத்தையே பெற்றிருப்பார். யாருக்கும் தெரியாத விஷயங்கள் கூட இவர்களுக்கு தெரிந்திருக்கும்.