சருமம் 10 நாட்களில் கண்ணாடி போல ஜொலிக்க வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

0

ஆண்கள், பெண்கள் என அனைவர்க்கும் சரும அழகை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். இதனால் கடைகளில் கிடைக்கும் கண்ட பொருட்களை உபயோகிப்பதை விட வீட்டிலேயே கெமிக்கல் சேர்க்காத பொருட்களை வைத்து முகத்தில் Facial செய்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலனை பெறலாம்.

தேவையான பொருட்கள்

beauty tips
beauty tips
  • கடலை மாவு
  • முல்தானி மெட்டி
  • ரோஸ் வாட்டர்
  • வேப்பிலை பவுடர் (காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொள்ளவும்)
  • மஞ்சள்தூள்
  • ஆரஞ்சு தோல் பவுடர்
  • எலுமிச்சை சாறு
  • பால்
  • தக்காளி
  • காபி பவுடர்
  • ஐஸ் கட்டி
  • தயிர்

வழிமுறை 1 – முதலில் கடலை மாவு, முல்தானி மெட்டி, வேப்பிலை பவுடர், மஞ்சள்தூள், ஆரஞ்சு தோல் பவுடர் இவை அனைத்தையும் கலந்து காற்று புகாதபடி டப்பாவில் போட்டு எடுத்துக் கொள்ளவும். இதில் 2 தேக்கரண்டி ஒரு சிறிய பௌலில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதில் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகம் கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவ வேண்டும். இதனால் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய், அழுக்குகள் வெளியேறும்.

face pack in tamil
face pack in tamil

வழிமுறை 2 – அரிசி கழுவிய நீர் அல்லது தண்ணீரை பிரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டியாக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்திற்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இறந்த செல்கள் மறையும்.

ice cube
ice cube

வழிமுறை 3 – தக்காளி சாறு, தயிர், மஞ்சள்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், மாசு மரு, இறந்த செல்கள், ஆங்காங்கே உள்ள கருமை அனைத்தும் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here