சிக்கன் என்றாலே அசைவ உணவு பிரியர்கள் வெளுத்து வாங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு சிக்கனில் சுவை அடங்கி இருக்கும். சிக்கனை வைத்து ஏகப்பட்ட ரெசிபிக்களை எளிதில் செய்து முடிக்கலாம். அந்த வகையில் இப்பொழுது சிக்கன் டிக்கா மசாலா எப்படி செய்வது என பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கி
தயிர் – 1 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு
வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும். அதன்பின் ஒரு பௌலில் போட்டு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
அதன்பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்தவுடன் அதில் பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து அதன்பின் தேங்காய்ப்பாலை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இப்பொழுது சுவையான ‘சிக்கன் டிக்கா’ மசாலா தயார்.