சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு ஆகும். சிக்கனை பலரும் உடலுக்கு கெடுதலான உணவு என்று கூறுவதுண்டு. ஆனால் நாம் பயன்படுத்தும் முறைபடியே சிக்கனின் நன்மை, தீமை உள்ளது. சிக்கனை 2 நாட்கள் வைத்து சாப்பிடும்போது தான் அது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். வாங்கிய உடனே சமைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு நலனையே தரும். இப்பொழுது இந்த சிக்கனை வைத்து ‘ஆச்சாரி சிக்கன்’ எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 5
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது
அரைத்த தக்காளி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்
மஞ்சள்தூள்
எலுமிச்சை சாறு
தேங்காய் பால்
ஊறுகாய் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளலாம்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி
செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து வதக்கி அதன் பிறகு அதில் வர மிளகாவை சேர்க்கவும். அதன் பின் சின்னதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். இப்பொழுது வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் ஊறுகாயை சேர்க்கவும். இப்பொழுது நாம் எடுத்து வைத்த சிக்கனை அதில் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் வற்றியதும் சிக்கனை இறக்கி பரிமாறினால் சுவையான ‘ஆச்சாரி சிக்கன்’ தயார்.