பள்ளிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை – அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!

0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை பிளக்கும் அளவிற்கு உயர்ந்தது. இந்நிலையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பெட்ரோல்,டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றைக் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் எரிபொருள் தட்டுப்பாடு மாறாமல் இருப்பதனால் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஜூலை 17ம் தேதி வரை விடுமுறை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஜூலை 18 அன்று மீண்டும் பள்ளி இயங்கும் என்று கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here