கொரோனா தடை காலங்களுக்கு பிறகு பண்டிகை, திருவிழா போன்ற கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தமிழ் நாடு காவல்துறையும் குற்ற சம்பவங்களை தடுக்க பல புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். மேலும் காவல்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு என பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
மதுரை வாசிகளே ரெடியா? ஜல்லிக்கட்டு முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!!
இதனால் இடைவெளி இல்லாமல் தினமும் காவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்களது குடும்பத்துடன் நேரங்களை செலவழிக்க விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.