மதுரை வாசிகளே ரெடியா? ஜல்லிக்கட்டு முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!!

0
மதுரை வாசிகளே ரெடியா? ஜல்லிக்கட்டு முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!!
மதுரை வாசிகளே ரெடியா? ஜல்லிக்கட்டு முதற்கட்ட பணிகள் தொடக்கம்!!!

உலகெங்கும் உள்ள தமிழர்களின் கலாச்சார பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மக்கள் படையெடுத்து உள்ளனர். எனவே பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பொங்கல் பண்டிகைகளில் முக்கியமான ஜல்லிக்கட்டு போட்டியை முழுவதுமாக தடை செய்ய பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனாலும் வழக்கம் போல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தொடரும் ஹேக்கர்களின் அட்டூழியம்.., கோடிக்கணக்கான பயனர்களின் தகவல் திருட்டு.., அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சியாக கொண்டாடும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஜனவரி 17ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here