ஜடேஜா இடத்தை தட்டி பறிக்கும் இளம் வீரர்…, இனி இவர் தான் எல்லாம்…, வெளிப்படையாக கூறிய கவுதம் கம்பீர்!!

0
ஜடேஜா இடத்தை தட்டி பறிக்கும் இளம் வீரர்..., இனி இவர் தான் எல்லாம்..., வெளிப்படையாக கூறிய கவுதம் கம்பீர்!!
ஜடேஜா இடத்தை தட்டி பறிக்கும் இளம் வீரர்..., இனி இவர் தான் எல்லாம்..., வெளிப்படையாக கூறிய கவுதம் கம்பீர்!!

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங்கின் நோ பால் குறித்தும், அக்சரின் அபாரமான ஆட்டத்தை குறித்துமே கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர், கவுதம் கம்பீர், அக்சர் படேலின் பார்ம் ஜடேஜாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, அக்சர் படேல் கடந்த 2 போட்டிகளிலும் ஆல் ரவுண்டராக தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக நேற்று நடந்த போட்டியில், 31 பந்தில் 3 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 65 ரன்களை குவித்ததுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இதனால், ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பினாலும், அக்சர் படேல் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவார் என கம்பீர் கூறியுள்ளார்.

“T20 யில் விராட் கோலி, ரோஹித் இல்லாதது ரொம்ப நல்லது”…, ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் நோ பால் குறித்து கம்பீர், இவர் முதலில் வலைப்பயிற்சியில் நோ பால் வீசாமல் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் வீரர்களை விளையாட வைத்து, அதன் மூலம் அவர்கள் தங்களது பார்மை நிலையாக நிறுத்திய பிறகு இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கினால் மட்டுமே இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here