சென்னையில் அதிகமாக பரவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
பொது முடக்கம்:
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் 5 ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. அதில் தமிழக அரசு மால்கள், வழிபட்டு தலங்கள் சில கட்டுபாட்டுகளுடன் திறக்க அனுமதி அளித்து இருந்தது. மேலும் சில இடங்களை திறக்க அனுமதி அளித்திருந்தது. உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது போன்ற அனுமதிகள் அளிக்கப்பட்டது.
பறவையிடம் இரக்கம் காட்டும் தோனியின் மகள் – வைரலாகும் போட்டோ..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆனால் கொரோனா பாதிப்பு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளனர். இதனால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்ற தகவல் பரவி வந்தது.
நீதிபதிகள் கேள்வி:
இந்நிலையில் இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் தமிழக அரசிடம் கொரோனா பதிப்பில் இருந்து மீண்டு வர அரசு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளதா? இப்பொது இருக்கும் இந்த பொது முடக்கத்தில் வேறு ஏதேனும் மாற்றம் கொண்டு வர திட்டம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கேள்விகளை எழுப்பி இருப்பதாக நீதிபதிகள் வினீத் கோத்தரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.