சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு அதிவேக பயணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது மற்றும் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது போன்ற செயல்களை செய்வோருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும் பொது மக்களின் அலட்சியத்தால் ஆங்காங்கே விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாநகரம் போலீசாருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதாவது இனி வரும் நாட்களில் பொதுமக்கள் மட்டுமில்லாமல், போலீஸ் அதிகாரிகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநகர காவல் துணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த உத்தரவை மீறினால் கண்டிப்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் இப்போது காவல் துறையினரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.