நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் தங்களுடைய வங்கி கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை வரவு வைத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு மேல் வரவு வைக்க விரும்புபவர்கள் தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தலாம். மேலும் வழக்கம் போல் வணிக வளாகம், அரசு பேருந்து, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.2,000 மாற்றலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பல வங்கிகளிலும் சில்லறை தட்டுப்பாடு அதாவது புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.200 உள்ளிட்ட நோட்டுகள் பற்றாக்குறையாக உள்ளது என தெரிவித்து வருகின்றனர்.
போலீசாருக்கே இப்படி ஒரு ரூல்ஸா.., இனி இத செஞ்சா கட்டாயம் நடவடிக்கை.., வெளியான அதிரடி அறிவிப்பு !!!
இதன் காரணமாக அந்த வங்கிகளில் பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புழக்கத்தில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள் தான் அதிக அளவில் உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சில்லறை தட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி எப்படி கையாளப்போகிறதோ? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.