
தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று நாளை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, த,தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மேலும் நாளை கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர், தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.