நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை இன்று (செப்டம்பர் 6) ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல வெவ்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஹரியானா மாநிலத்தில் ‘ஜன்மாஷ்டமி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறையை அரசு அளித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, ஹரியானாவில் அரசினர் விடுமுறையில் செப்டம்பர் 6க்கு பதிலாக செப்டம்பர் 7 என ஜன்மாஷ்டமி பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹரியான அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஹரியானாவின் விரிவான திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.