உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பாக, பல்வேறு நகரங்களை மையமாக கொண்டு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று (செப்டம்பர் 5) முதல் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கு பெற்றுள்ள இந்திய வீரர்கள் தொடர் ஏமாற்றத்தை தந்துள்ளனர். அதாவது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், லக்ஷ்யா சென், பிரணாய் H.S. மற்றும் பிரியன்ஷு ரஜாவத் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறி உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களை தொடர்ந்து, ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேஷியா வீரர்களிடம் 17-21, 21-11, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளனர். இதில், இந்தியாவின் மகளிர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் சீனா வீராங்கனைகளிடம் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி உள்ளனர். இதன் மூலம் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பாக ஒருவர் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு நடந்த சோகம்…, பயிற்சியாளர் ஓபன் டாக்!!