அன்றைய காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வரதட்சணைக்காக கட்டுன மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஒரு கட்டத்தில் மனைவி பணம் வாங்கிட்டு வராத கோபத்தால் மனைவியை கயிற்றில் கட்டி, கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார். அப்போது அதனை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக ராகேஷை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
“G20 மாநாடு” காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!