இந்தியாவில் சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து வருகிறது. தற்போது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சையை கைவிட்ட அரசு – இது தான் காரணமா??
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சுமார் 1 மாத காலமாக 3 லட்சத்தை தாண்டி வந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது. அதன்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,63,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,78,719 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,15,96,512 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 33,53,765 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர்.