பிளாஸ்மா சிகிச்சையை கைவிட்ட அரசு – இது தான் காரணமா??

0
பிளாஸ்மா சிகிச்சையை கைவிட்ட அரசு - இது தான் காரணமா??
பிளாஸ்மா சிகிச்சையை கைவிட்ட அரசு - இது தான் காரணமா??

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் விகிதத்தை குறைப்பதற்காக பல சிகிச்சை வழிகளை அரசு கையாண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பிளாஸ்மா சிகிச்சையை தற்போது அரசு கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பூட்டிய கோவில் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

பிளாஸ்மா சிகிச்சை:

சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக நாட்டு மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. கடந்த ஆண்டு இதனை பற்றிய முழு விவரம் தெரியாததால் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திணறி வந்தனர். மேலும் பல வகை சிகிச்சையையும் மேற்கொண்டு வந்தனர். அதில் ஒன்று தான் பிளாஸ்மா சிகிச்சை.பிளாஸ்மா சிகிச்சை என்றால் ஒருவர் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டு அவர் தொற்றில் இருந்து மீண்டால் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாய் இருக்கும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிளாஸ்மா சிகிச்சை:
பிளாஸ்மா சிகிச்சை:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக அவரது உடல் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை தனியாக பிரித்து அதனை கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்துவர். இது கடந்த ஆண்டு இறப்பு விகிதத்தை சற்று குறைப்பது போல் தெரிந்தது. மேலும் அறிகுறி தோன்றிய ஏழு நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால் தற்போது பிளாஸ்மா சிகிச்சையை அரசு கைவிட்டது. தற்போது இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர் தேசிய பணிக்குழு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதன்படி தெரிவித்ததாவது, நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொற்று பாதிப்பையும் மற்றும் உயிரிழப்பையும் குறைக்கவில்லை. இதன் காரணமாக இதனை கைவிடப்பட்டதாக தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here