கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பிரபலங்களையும் திரையுலகம் இழந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு 2021 ஆரம்பித்ததில் இருந்து நம்மை சிரிக்க வைத்து அழகு பார்த்த சிகரங்களின் உயிரிழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகர்கள்
கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா தொற்று பலரையும் வாட்டி வதைத்து மக்கள் ஓரளவிக்ரு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை படுபயங்கரமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நாள் ஒன்றுக்கு இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்ததும் இந்த கொரோனா ஒழிந்த பாடில்லை. மேலும் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். அருண் ராஜாவின் மனைவி மரணம் பலரையும் உலுக்கியது.
மேலும் விவேக், நெல்லை சிவா, மாறன், துளசி, பவுன் ராஜ் என பல காமெடி நடிகர்களை இந்த திரையுலகம் இழந்துள்ளது. மாறன், துளசி, பவுன்ராஜ் போன்றோர் சில காட்சிகளுக்கு வந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நிலைத்திருந்தவர்கள். இவர்களின் மறைவு பலரையும் சோகத்தில் தான் ஆழ்த்தியுள்ளது.