டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஆன குல்தீப் சிங் 82 வயதான மூதாட்டியை கொரோனா தடுப்பூசி மையத்திற்கு தூக்கி செல்லும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது. மேலும் குல்தீப் சிங் ஏழைகளுக்கு நாம் உதவி செய்தால், நாம் அனைவரும் ஒன்றாக இந்த தொற்றுநோயை வென்றிட முடியும் என்று கூறியுள்ளார்.
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அதிரடி!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் உடல்நல குறைபாடுகளுடன் சேர்த்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கரோனா தடுப்பு பணியில் மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுடன் காவல் துறையினரும் ஒருங்கிணைந்து, முன்களப் பணியாளர்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஓயாது பணிபுரிந்து வருகின்றனர். இதனால், காவல் உயரதிகாரிகள் முதல், இரண்டாம் நிலை காவலர்கள் வரை ஆயிரக்கணக்கான போலீஸார் பாதிக்கப்பட்டனர். உயிரழப்புகளும் ஏற்பட்டுள்ளன.இந்த சூழலில் டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் குல்தீப் சிங் 82 வயதான மூதாட்டியை கொரோனா தடுப்பூசி மையத்திற்கு தூக்கி செல்லும் புகைப்படம் பலரின் பாராட்டை பெற்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.