10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அதிரடி!!

0
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் - காவல்துறை அதிரடி!!
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் - காவல்துறை அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை காவல்துறை அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் இ – பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு சேர்ப்பு !!!

இ-பதிவு:

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி காலை 4 மணி முதல் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 24ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.ஊரடங்கின் தொடக்கத்தில் தமிழக அரசு பல தளர்வுகளை அளித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இதன் எதிரொலியாக தமிழக அரசு ஊரடங்கு நடவடிக்கையை மிக கடுமையாக்கியது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை, காய்கறி கடைகள் அனைத்தும் காலை 10 மணி வரை இயங்கும் என்றும் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே செல்ல இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்தது.தற்போது இதுகுறித்து சென்னை காவல்துறை அதிரடியான அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு பின்பு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இ-பதிவு இல்லாமல் வெளியே திரிபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னை புறநகர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here