IND vs SL: இவரை நம்பி தான் இந்திய அணி களமிறங்குகிறது.., கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

0
IND vs SL: இவரை நம்பி தான் இந்திய அணி களமிறங்குகிறது.., கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!
IND vs SL: இவரை நம்பி தான் இந்திய அணி களமிறங்குகிறது.., கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

இந்திய கிரிக்கெட் அணியுடன் T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. தேர்வுக்குழுவின் தேர்வின்படி இந்திய அணியின் T20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். இந்தியா, இலங்கை மோதும் முதல் T20 போட்டி இன்று (03.01.2023) மாலை 07.00 அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து ஒரு நாள், டெஸ்ட் என உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்த தொடர்கள் உள்ளன. கடந்த வருடம் ஆசிய கோப்பை, T20 உலக கோப்பை என சீனியர் வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் கோப்பைகளை கோட்டை விட்ட இந்திய அணி இம்முறை பலம் வாய்ந்த இளைஞர் அணியாக களமிறங்க உள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட உலகின் நம்பர் 1 வீராங்கனை…, மீண்டு வருவேன் என நம்பிக்கை!!

இதையடுத்து T20 கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “தொடர்ந்து அதிரடி ஆட்டங்களை மேற்கொண்டு வரும் சூர்யகுமார் யாதவ் இந்த இலங்கை தொடர்களில் மிகவும் முக்கியமானவர். T20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நட்சத்திர நாயகனாக விளங்குவர் என நானும் தேர்வுக்குழுவும் உறுதியாக நம்புகிறோம்” என சூர்யகுமாரை மிகைப்படுத்தி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here