நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 42ன் இந்தி உரிமை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யா 42:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து மொத்தமாக விலகினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து இப்பொழுது சிறுத்தை சிவா படைப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் சிவா கடையில் இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படு மோசமாக விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்ததால், சூர்யா 42 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தி உரிமை மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பைனலுக்கு போக உச்சகட்டத்தில் மோதும் ஹவுஸ் மேட்ஸ்., கலவரமான வீடு! இதுதான் ரியல் Ticket to Finale!!
அதாவது தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் கடா, “சூர்யா 42” படத்தின் இந்தி உரிமையை கிட்டத்தட்ட 100 கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் இந்தி சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக போன்றவைகளின் உரிமைகளையும் டாக்டர் ஜெயந்திலால் கடா பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஷூட்டிங் நடக்கும் போதே கோடிக்கணக்கில் பணத்தை சூர்யா 42 படம் அள்ளி இருப்பதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.