ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் – ஹர்திக் பாண்ட்யா விலகல்!!

0

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அதில் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பங்குபெறவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்:

முன்னதாக சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசினார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான டெஸ்ட் தொடர் அடிலெய்டில் வருகிற 17-ம் தேதி தொடங்கவுள்ளது. அதில் ஹர்திக் பாண்ட்யா பங்குபெறவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது, “பாண்ட்யாவால் தற்போது உள்ள சூழ்நிலையில் பந்து வீச முடியாது, அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தாலும், அவர் பந்து வீசுவது அவசியமானது. டெஸ்ட் கிரிக்கெட்கள் மிகவும் சவால் நிறைந்தது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் பேட்டிங், பௌலிங் இரண்டுமே அவர் சிறப்பாக செய்தார்”.

உனக்கு கல்யாணம் பண்ண வேற ஆம்பளயே கிடைக்கலயா?? – வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன்!!

மேலும் பேசிய அவர்,”இந்திய அணிக்காக அனைத்து நிலையில் தற்போது பாண்ட்யா இருக்கிறார். அதே வேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடம்பெற பவுலிங்கிலும் ஃபார்முக்கு வர வேண்டும் என்பதை பாண்ட்யாவே உணர்ந்திருக்கிறார். இது குறித்து நாங்கள் விவாதித்து விட்டோம்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here