உனக்கு கல்யாணம் பண்ண வேற ஆம்பளயே கிடைக்கலயா?? வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று விறுவிறுப்பான சம்பவம் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் அகிலனுக்கு விஷயம் தெரிய பாரதியை தேடி கோவிலுக்கு செல்கிறார். கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா?? என்பதை இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா

சௌந்தர்யா வெளியூருக்கு சென்றிருக்கும் வேளையில் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அப்பொழுது இந்த திருமணத்தில் பல தடைகள் வரவே அதையும் தாண்டி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறார் பாரதி. அடுத்ததாக வெண்பாவும் ஹேமா தன் கனவில் வந்து உன்னை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியதாக சொல்ல சொல்லி பாரதியை மேலும் குழப்பி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கோவிலுக்கு கிளம்பி வரும் பாரதியை கல்யாண கோலத்தில் பார்க்கிறார் அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண். அஞ்சலிக்கு கால் செய்து சொல்ல அவரும் வீட்டில் இதனை பற்றி கூற அகிலன் கோவிலுக்கு கிளம்புகிறார். அஞ்சலி அம்மா கண்ணம்மாவை தேடி செல்கிறார். கோவிலில் ஐயர் பிரகாரத்தை சுற்றி வர சொல்ல வேறு வழி இல்லாமல் சுற்றி வருகின்றனர்.

இன்னும் முகூர்த்தத்திற்கு 20 நிமிடங்கள் இருக்க வெண்பா இப்பொழுதே தாலி கட்ட வேண்டும் என்று பதட்டமடைகிறார். இதனால் ஐயர் நீங்க ரெண்டு பெரும் என்ன வேலை பார்க்குறீங்க என்று கேட்க டாக்டர்ஸ் என சொல்கின்றனர். அடுத்ததாக நல்ல நேரம் வரவே தாலி கட்ட தயாராகிறார் அகிலன். அப்பொழுது சரியான சமயத்தில் அகிலனும் அஞ்சலியும் வருகின்றனர்.

‘சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலை தான், ஆதாரம் உள்ளது’!!

இதனால் பாரதியும், வெண்பாவும் அதிர்ச்சியடைகின்றனர். ‘இந்த வெண்பா எல்லாம் ஒரு ஆளுனு அவளை போய் கல்யாணம் பண்ணிக்கிற’ என்று சொன்னதும் பாரதிக்கு கோவம் வருகிறது. அகிலன் வெண்பாவிடம் உனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சுனா உலகத்துல எதனை பேரு இருக்கான். பாரதி தான் கிடைத்தானா?? என்று கேட்க பாரதி அகிலனின் சட்டையை பிடிக்கிறார்.

அடுத்ததாக கண்ணம்மாவை அஞ்சலியின் அம்மா பார்த்து நடந்த அனைத்தையும் கூற கண்ணம்மாவிற்கு கோவம் தலைக்கு மேல் வருகிறது. இந்த விஷயத்தை நம்ம சும்மா விட கூடாது என்று வேகமாக கோவிலுக்கு செல்கின்றனர். அடுத்து அகிலன் பாரதியின் கையை பிடித்து வா வீட்டிற்கு போகலாம் என்று அழைக்க ‘பாரதி நீ யாரு? என் வாழ்க்கையை தீர்மானிக்க வெளியே போ’ என்று கத்துகிறார்.

ஆனால் அகிலன் விடுவதாக இல்லை. இது சட்டப்படி குற்றம். முறைப்படி விவாகரத்து வாங்காம எப்படி நீ கல்யாணம் பண்ணிக்குவ?? என்று கேட்க பாரதி அப்படி தான் பண்ணிக்குவேன் உன்னால என்ன பண்ண முடியுமோ அதை செஞ்சுக்கோ என்று தாலி கட்ட செல்கிறார். அப்பொழுது சரியான நேரத்தில் கண்ணம்மா வந்து விடுகிறார். பாரதியை முறைக்க எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here