பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தனர். அவர் இறந்தது தற்கொலையா? இல்லை கொலையா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் ஒருவர் சித்ரா தற்கொலை செய்யவில்லை கொலை செய்ப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
சித்து கொலை??
நடிகை சித்ரா சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று சேலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரை சடலமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் தங்களது கருத்தைகளை தெரிவிக்கிறார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சித்ரா தைரியமான பெண் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக அதை எதிர்கொள்வார், அவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என கண்டுபிடியுங்கள் என்று மக்கள் அவர்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். மேலும் மகள் தற்கொலைக்கு யார் கரணம் என்று கண்டுபிடியுங்கள் என்று அவரது தந்தையும் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் – டிக்டாக் ரவுடி பேபி சூர்யா அதிரடி கைது!!
இந்நிலையில் சித்ராவை சடலமாக எடுத்த புகைப்படத்தை பார்த்த பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் தினேஷ் ராவ் இவ்வாறு கூறினார். தற்கொலை செய்து கொண்டால் கழுத்தில் தடயங்கள் இருக்க வேண்டும் ஆனால் அவரது முகத்தில் நகக்கீறல்கள் இருக்கின்றன. இந்த நகக்கீறல்கள் தான் இந்த வழக்கிற்கு அடிப்படை ஆதாரம். இதைவைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக தற்கொலை செய்யவில்லை, கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என திடுக்கிடும் தகவல்களை அளித்தார்.
ஒருவர் மற்றொருவரை கட்டாயப்படுத்தும் போது அவருடனான வாக்குவாதத்தில் தான் காயங்கள் ஏற்படும் என்றார். ஒரு வழக்கிற்கு தடவியல் நிபுணர்கள் தான் முக்கிய ஆதாரமாக இருப்பர். இந்நிலையில் தினேஷ் ராவ் அளித்த இந்த வாக்குமூலம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசாரும் பலவித கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.