கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. விளையாட்டுத் துறையும் இதனால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா:
இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடம் கொரோனவால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்து உள்ளார். இது குறித்து பல்வேறு விதமான ஆலோசனைகளும் பலரும் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த ஹர்திக், ‘‘ரசிகர்கள் கூட்டம் இல்லாத நிலையில் ரஞ்சி கோப்பை போட்டியில் நான் விளையாடியுள்ளேன். அந்த உணர்வு வித்தியாசமானது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகளும் அப்படி நடந்தால் அது சிறந்த ஆப்சனாக இருக்கும். குறைந்த பட்சம் மக்கள் வீட்டில் இருந்தே போட்டியை பார்க்க முடியும்’’ என கூறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |