இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் குறித்துக் கண்டறிய சோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் சீனாவிடம் இருந்து துரித டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது. அதில் ஊழல் நடைபெற்று உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதிக விலையில் விற்பனை:
கொரோனா வைரஸ் தாக்கத்தை வேகமாக கண்டறியும் துரித டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து ரூ.225க்கு வாங்கி ரூ.600க்கு விறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்களவை எம்பி ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘தங்களுடைய லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் சொல்லிலடங்கா துயரங்களை அனுபவித்து வரும் இவ்வேளையில் ஒருவர் லாபமீட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட செய்தியாக உள்ளது. இந்த ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் ஆகும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமரை வலியுறுத்துவேன்’ என தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |