“விராட் கோலியை தடுப்பது எளிதானது அல்ல”…, ஹர்பஜன் சிங் புகழாரம்!!

0
"விராட் கோலியை தடுப்பது எளிதானது அல்ல"..., ஹர்பஜன் சிங் புகழாரம்!!

டி20 மற்றும் 50ஓவர் போட்டிகளில் பார்முக்கு திரும்பி உள்ள, விராட் கோலி நாளை நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் சதம் அடிப்பார் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்:

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நாளை, முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த டிராபியானது, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கியமாக பார்க்கப்படுவதுடன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை எட்டிப் பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், இந்திய அணி டிராபியின் வெற்றிக்காக கடுமையாக போராட கூடும். இதற்கிடையில், நாளை முதல் டெஸ்ட் நாக்பூரில் நடைபெற இருப்பது, இந்திய வீரர்களுக்கு கூடுதலாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, நாக்பூரில் 4 இன்னிங்கிஸில் விளையாடி உள்ள, விராட் கோலி ஓர் இரட்டை சதம் உட்பட 2 சதங்களை அடித்துள்ளார். இதனால், நீண்ட மாதமாக டெஸ்ட் தொடரில் சதம் அடிக்காமல் இருக்கும் இவர் மீது, தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியை மிஸ் செய்யும் முன்னணி வீரர்கள்…, காயத்தால் ஏற்பட்ட நிகழ்வு!!

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது, விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங்கை கொண்டாடும் விதமாக இந்த டிராபி அமையும் என எதிர்பார்க்கிறேன். இந்த வருடத் தொடக்கத்திலேயே 2 சதங்களை அடித்து தனது பார்மை வெளிப்படுத்தி உள்ளார். இவர் பார்மில் உள்ள போது, இவரை தடுப்பது என்பது எளிதான ஓன்று அல்ல என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here