இன்று அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முடி குறித்த பிரச்சனை. முடி சிலருக்கு அவ்வளவு சீக்கிரம் வளராது. அதற்கு இயற்கையான முறை ஒன்றை பின்பற்றினால் முடி அடர்த்தியாக வளரும். அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
அடர்த்தியான முடியினை பெற,
இன்று ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொதுவான கவலை முடி குறித்த பிரச்சனை தான். சிலருக்கு சில காரணங்களால் முடி அவ்வளவு அடர்த்தியாக வளராது. இதற்கு பரம்பரை வாகு, நாம் வேலை செய்யும் இடம், முறையாக பரம்பரிக்காதது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி பார்லர் அல்லது மருத்துவ முறையினை நாடுகின்றனர். இந்த முறைகள் ஆரம்பத்தில் நல்ல பலனை அளித்தாலும், பின் படிப்படியாக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இதனால் ரசாயன முறைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு நீளமான அடர்த்தியான முடியை பெற முடியும். தொடர்ச்சியாக அந்த முறையினை பின்பற்றினால், அடர்த்தியான முடியினை கண்டிப்பாக பெறலாம். அதற்கு தேவையானவை, கருவேப்பில்லை சாறு, உங்கள் முடி அளவினை பொறுத்து எடுத்து கொள்ளலாம், பின் ஒரு கப் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கருவேப்பில்லை சாறு மற்றும் அரிசி தண்ணீர் இரண்டையும் கலந்து வைத்து கொள்ள வேண்டும். தலையில் வேர்க்கால்களில் படும் படி தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளவும். பின், சிறிது நேரம் கழித்து அதனை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதனை நன்றாக ஷாம்பு போட்டு அலசி விட வேண்டும். இவ்வாறாக தொடர்ச்சியாக செய்து வந்தால் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்ந்து விடும்.