லக்ஷ்மியை கண்ணம்மாவிடம் இருந்து தத்தெடுக்க முடிவெடுக்கும் சௌந்தர்யா – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0

பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் போட்டி எல்லாம் முடிந்து அனைவரும் தங்களது வீட்டிற்கு கிளம்பிக்கொண்டுள்ளனர். லக்ஷ்மியை கண்ணம்மாவிடம் இருந்து தத்தெடுக்க முடிவெடுக்கிறார் சௌந்தர்யா.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி என 2 சீரியலும் டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த மெகா சங்கமத்தில் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் முதல் பரிசை ராஜா ராணி குடும்பம் பெற்றுக்கொண்டது. இன்றைய எபிசோடில் துளசி வந்து கண்ணம்மாவிற்கு இங்கிருந்தது பிடித்திருந்ததா?? என்று கேட்க பாரதியால் தனக்கு கொடுத்த இம்சையெல்லாம் சொல்கிறார்.

மேலும் லட்சுமிக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டே இருந்ததாக சொல்கிறார். அடுத்து லட்சுமி ஹாலில் இருந்த மசாஜ் மெஷினை பற்றி சொல்லி கண்ணம்மாவை அழைக்கிறார். ஆனால் கண்ணம்மா வீட்டிற்கு கிளம்ப சொல்கிறார். ஆனால் லட்சுமி தானும் துளசியும் இங்கே இருப்பதாக சொல்கிறார்.

இதனால் கோவப்படும் கண்ணம்மா அடிக்க செல்கிறார். இதனால் கோவமடையும் லட்சுமி அங்கிருந்து சென்று விடுகிறார். அடுத்ததாக துளசி சௌந்தர்யாவிடம் வந்து நடந்ததை சொல்கிறார். அடுத்து கண்ணம்மாவிடம் வந்து லட்சுமிக்கு இந்த வயசுக்கு ஆசை பட்டத்தை கொடுத்தா தான் நல்ல வளருவாங்க.

அதன் பிறகு தன் பேத்திக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கூறி வருத்தப்படுகிறார். அடுத்ததாக லட்சுமியை தான் வளர்ப்பதாக சொல்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். தன் பேத்தியை தன் கையால் வளர்க்க வேண்டும்.

அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி தர வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை என்று கூறுகிறார். ஆனால் கண்ணம்மா லட்சுமி தான் இந்த உலகத்தில் இருக்க கூடிய ஒரே சொந்தம், என்னுடைய உயிர் என்றும் கூறி லக்ஷ்மியை தர மறுக்கிறார். அடுத்து வெண்பாவும், பாரதியும் பேசிக்கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கு வரும் சௌந்தர்யா அங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்ல வெண்பாவை பார்த்து உன் வேலையெல்லாத்தையும் விட்டுட்டு எப்படி இங்க வந்து இருக்க என்று கேட்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மாவிடம் கிளம்புவதாக சொல்லுகிறார் சந்தியா. கண்ணம்மாவிடம் எனக்கு வேண்டும் என்றே விட்டு கொடுத்தீர்களா?? என்று கேட்கிறார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். அடுத்ததாக போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். சந்தியாவை ஊரில் மரியாதையுடன் அழைத்து வருகின்றனர். தெருவே சந்தியாவை பற்றி புகழுகிறது. ஆனால் சிவகாமி கோவமாக உள்ளார். பார்வதி சிவகாமியிடம் ஒன்றுக்கு இரண்டாக வத்தி வைக்கிறார். சந்தியா கஷ்டப்பட்டு எல்லாம் ஜெயிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

பீச்சில் உல்லாசமாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

கண்ணம்மா விட்டு கொடுத்து தான் இந்த போட்டியில் சந்தியா ஜெயித்ததாக சொல்கிறார். சிவகாமி அதான பார்த்தேன் என்றும் சொல்கிறார். கடைசியில் இந்த போட்டியை மாற்றியதும் ஒருதடவை கூட சொல்லணும்னு தோணலைல என்று சொல்கிறார். இன்னும் மூன்று மாதம் தான். உன்னால என்கிட்ட நல்ல மருமகள்னு நிரூபிக்க முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here