பெண்கள் என்றாலே கூந்தல் தாங்க அழகு, இப்போ இருக்குற பெண்களுக்கு பெரும்பாலான பிரச்சனையே முடி அதிகமா உதிர்வது சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாகவும், நாம உணவு பழக்கத்தினாலும் இந்த தவறு அதிகமா நடக்குது. இனி அந்த கவலை வேண்டாம் வாங்க வீட்டிலையே எப்படி எண்ணெய் தயார் செய்யலாம்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 1/4
நல்ல எண்ணெய் – 1/4
விளக்கெண்ணெய் – 1/4
கடுகு எண்ணெய் – 1/4
கற்றாழை – 200 g
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
பெரிய நெல்லிக்காய் – 3
வெந்தயம் – 20 g
கருஞ்சீரகம் – 20 g
செய்முறை:
முதலில் கற்றாழை, கருவேப்பிலை,நெல்லிக்காய் போன்றவற்றை அரைத்து
எடுத்துக்கொள்ளவும். பெரிய வானிலையில் நான்கு எண்ணெய்களையும் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் அரைத்த விழுதை சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை காய்ச்சவும்.
நன்கு நிறம் மாறிய பின் அடுப்பில் இருந்து வானிலையை இறக்கிவிட்டு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து மூன்று நாட்கள் ஊற விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு கார்ட்டன் துணியால் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்குக் கொண்டு எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஒரு மாதத்திலே முடி உதிர்வு நின்று நன்றாக வளரும். உடல் சூட்டை தணிக்கும்.