பிக் பாஸில் தற்போது பல சண்டைகள், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் இடையே ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இது வரையிலும் சண்டைக்களமாக இருந்த பிக் பாஸ் வீடு காதல் களமாக மாறியுள்ளது.
பிக் பாஸ்
நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் ஏற்பட்டன. மேலும் அர்ச்சனா மற்றும் பாலா இடையே ஒரு போர்க்களமாக சண்டை வெடித்தது. தூங்கிக்கொண்டிருக்கும் பாலாவை எழுப்பி வேலை வாங்கியதால் கடுப்பாகும் பாலா அனைவரிடமும் சண்டையிடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் தேவையே இல்லாமல் மூக்கை நுழைகிறார் ரியோ. வெளியில் ரியோவிற்கு இருந்து வந்த புகழ் தற்போது கொஞ்சமாக மறைந்து வருகிறது என்றே சொல்லலாம். தேவையில்லாத விசயத்திற்கு எல்லாம் கோவப்பட்டு பெயரை கெடுத்துக்கொண்டுள்ளார் ரியோ. இந்த வாரம் முழுக்க பாலாஜிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் நேற்று அர்ச்சனாவிடம் நடந்த சண்டையில் கார்டன் ஏரியாவிற்கு சென்று பாலா அழுதது அவரது ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது. அதன் பிறகு பாலா மற்றும் அர்ச்சனா இடையே நடந்த பாச போராட்டம் அனைவரும் சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம். மேலும் கேபிரியலாவிற்கு ஏற்கனவே பாலா மீது ஒரு கிரஸ் உள்ளது என்பதை நாம் கண் கூடாகவே பார்த்துள்ளோம்.
ஆனால் கடந்த எபிசோடுகளில் பாலாவிற்கு ஷிவானி மீது கிரஸ் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதுவரையிலும் இல்லாத விதமாக முக்கோண காதல் கதை பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்து வருகிறது. அடுத்த கவின் லாஸ்லியாவாக ஷிவானி மற்றும் பாலாஜி இடம் பெறுவதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது ஷிவானி மற்றும் பாலாஜிக்கு டாஸ்கை வேறு கொடுத்துள்ளனர். ஷிவானி பாலாஜிக்கு குடைபிடித்து செல்ல வேண்டுமாம். இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.