கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தேர்வை மொத்தம் 3000 தேர்வு மையங்களில் 16 லட்சத்து 855 பேர் எழுதினார். இந்நிலையில் இதற்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதற்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது.
ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிடம்,
தரவரிசை பட்டியலை ஆய்வு செய்த போது முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கூறப்படுகிறது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.