தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பெண்கள், சிறுமிகள் என பலபேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடுமையான தண்டனைகள் கொடுத்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது டெல்லியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை இறந்த நிலையில் அவருடைய நண்பர் அந்த மாணவியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று தனது மகளை போல் வளர்த்து வந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆரம்பத்தில் அப்பாவாக நடந்து கொண்ட அந்த நபர் நாளைடைவில் அந்த மாணவியிடம் அத்துமீற தொடங்கினார். டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகளை மேம்பாட்டு துறையில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரின் அந்தரங்க இச்சைக்கு ஒன்னும் தெரியாத அந்த மாணவி இறையாகியுள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி போலீசில் புகார் கொடுத்த நிலையில் அந்த நபரை பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த நபரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.