மக்களின் நலனுக்காக தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த நலத்திட்டங்களை பொது மக்கள் பெற வேண்டுமானால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவையாக உள்ளது. இதனால், ஒரே குடும்பத்தில் உள்ள தாய்-தந்தை, மகன்-மருமகள் என தனித்தனியாக ரேஷன் கார்டுகளை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாகவே, புதிய ரேஷன் கார்டுகளை பெற பல்லாயிர விண்ணப்பங்கள் உணவு வழங்கல் துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. இவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்க குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என ஏற்கனவே கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, தனி அடுப்பு கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளை வைத்துள்ளார்களா? என தீவிர விசாரிக்கின்றன. இதனால் தான் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த விசாரணை முடிய முடிய விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) வரை பள்ளிகளுக்கு விடுமுறை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!!!