இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் உறுதி!!

0
Chennai High Court
Chennai High Court

தமிழகத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பணிகளில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையை அங்கீகரிக்கக்கோரும் சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கிற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அரசுப்பணிகளில் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என உறுதியாக தெரிவித்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

court order
court order

பெண் தற்கொலை செய்துகொண்டதை வீடியோவாக எடுத்தவர் கைது – போலீசார் அதிரடி!!

மேலும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் இருவருக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது தொடர்பான தீர்ப்பினை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.  மேலும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் உத்தரவை அமல்படுத்தாத தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் TNPSC செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here