கடந்த வாரம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.
பொது முடக்க உத்தரவு:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட பொது முடக்க உத்தரவால் தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதனால் பங்குச்சந்தை சரிவு அடைந்து பொருளாதாரம் வரலாறு காணாத அளவு -24 ஜிடிபியாக சரிந்தது. இதனால் அச்சம் அடைத்த தொழில் முதலீட்டாளர்கள் தங்களது எதிர்கால நலன் கருதி தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!
இதனால் பொது முடக்க காலத்தில் கூட தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் சவரன் நாற்பத்தி மூன்றாயிரமாக விற்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வந்தது. அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்தே தங்க விலை அதிரடியாக உயர்ந்து மக்களை அச்சம் அடைய வைத்தது.
இன்றைய விலை நிலவரம்:
கடந்த வாரம் முழுவதுமே தங்க விலை உயர்ந்து கொண்டு இருந்தது. மாலை நேர விலை நிலவரங்களும் அதே போல் தான் இருந்து வந்தது. ஆனால், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ரூ.38,440 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் குறைந்து ரூ.4,805 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் ஒரு கிராம் ரூ.5,103 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவரன் 40,384 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 62.90 என்ற விலை நிலவரத்தில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ 62,900 என்று விற்பனை செய்யப்படுகிறது.