இந்திய திரையுலகம் இந்த வருடத்திற்குள் பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. எஸ்.பி.பி., சுஷாந்த் சிங், வடிவேல் பாலாஜி என தொடர்ந்து பல பிரபலங்களை நாம் இழந்து வருகிறோம். இந்நிலையில் தற்போது பாலிவுடில் பிரபல நடிகரான அஜய் தேவ்கனின் தம்பி அனில் தேவ்கன் உயிரிழந்துள்ளது திரையுலகை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அனில் தேவ்கன்
பாலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை தந்தவர் தான் அஜய் தேவ்கன். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர். இவரின் சகோதரர் தான் அனில் தேவ்கன். இவர் ஹிந்தியில் திரைப்பட இயக்குனராக இருந்தவர். இவர் அஜய் தேவ்கனை வைத்து 2002 இல் ராஜு ஜாஜா என்ற படத்தை இயக்கினர்.
மேலும் 2005 இல் பிளாக் மெயில் என்ற படத்தையும் இயக்கினார். மேலும் அஜய் தேவ்கன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போது அனில் தேவ்கனுக்கு 45 வயது ஆன நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதனை குறித்து அவரது அண்ணனான அஜய் தேவ்கன் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, ‘எனது தம்பியான அனில் தேவ்கனை நேற்று இரவு இழந்து விட்டேன். அவரின் இந்த எதிர்பாராத இழப்பு எங்களின் இதயத்தை உடைய செய்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக இறுதி அஞ்சலி கூட்டத்தை நடத்தவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் இறந்ததிற்கான காரணத்தை இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை. மேலும் திரையுலகை சேர்ந்த பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.