பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போதைப்பொருட்கள் புழக்கம் கண்டறிப்பட்டதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுடன் தேசிய போதைப்பொருள் தடுப்பு பணியகமும் இணைந்தது. இது தொடர்பான விசாரணையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா, ரியாவின் சகோதரர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் ஆகிய நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்நிலையில் இன்று ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவரது சகோதரர் ஷோயிக் மற்றும் போதைப்பொருள் சப்ளையர் அப்தெல் பாசித் பரிஹார் ஆகியோரின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சமையல்காரர் தீபேஷ் சாவந்த் மற்றும் அவரது வீட்டு உதவியாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகர் ரியா சக்ரவர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பத்து நாட்களுக்கு ரியா தனது அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் சகோதரர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!
மேலும் அவரது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும், மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் விரைவில் பிரபல நடிகை, நடிகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.