Saturday, April 27, 2024

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

Must Read

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிகபட்சமாக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ச்சியான உயர்வு:

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குசந்தை என்றும் காணாத அளவு சரிவினை சந்தித்தது. பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தங்களது எதிர்கால நலன் மற்றும் தொழில் நலன் கருதி அவர்கள் அனைவரும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று அதில் அதிக அளவு முதலீடு செய்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதன் விளைவாக பொது முடக்ககாலத்திலும் கூட தங்க விலை யாரும் எதிர்பாராவண்ணம் அதிகரித்தது. தொடர்ச்சியான விலை உயர்வால் மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்து தங்க விலை ஏற்றம் மற்றும் இறக்கங்களுடன் தான் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. நேற்று குறைந்த தங்க விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து  ரூ.37,640 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒரு கிராம் தங்கம் 22 ரூபாய் உயர்ந்து 4,705 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கம் ஒரு சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 40,640 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்க, வெள்ளி விலை கிராம் ரூ.67.80, ஒரு கிலோ வெள்ளி 67,800 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -