மாரடைப்பால் உயிரிழந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!!

0
zarina roshan

விஜய் டிவியை போலவே பல நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பிரபலமாக ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘இனிய இரு மலர்கள்’ சீரியலில் பாட்டியாக நடிக்கும் ஜரீனா ரோஷன் என்பவர் என்பவர் உடல்நல குறைவினால் உயிரிழந்தார். பலரும் அவருக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இனிய இரு மலர்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் அவ்வளவாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி டிஆர்பியை உயர்த்தி வருகின்றனர். விஜய் டிவிக்கு போட்டியாக இருக்கும் ஜீ தமிழ் விஜய் டிவியையும் முந்தியுள்ளது.

zarina roshan

மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஜீ தமிழ் காப்பி அடிப்பதும் உண்டு. இதனை பலரும் கலாய்ப்பது உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் போலவே ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் என்று ஒரே வீட்டில் 26 பேரை தங்கவைத்து அந்த வீடீயோவையும் ஒளிபரப்பியது. பலரும் இதற்கு கண்டபடி கமன்ட் செய்தனர்.

zarina roshan
zarina roshan

இப்பொழுது இந்த ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிந்தி சீரியலின் தமிழ் டப்பிங் தான் இனிய இரு மலர்கள். இந்த சீரியலுக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது. என்ன தான் ஹிந்தி சீரியலாக இருந்தாலும் மக்களிடையேயே பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

zarina roshan

இதில் நாயகியான பிரக்யாவிற்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். பல லவ் ஸ்டேட்டஸ் கூட அபி பிரக்யாவை வைத்தே அதிகம் வெளியாகும். இந்த சீரியலில் அபிக்கு பாட்டியாக நடித்தவரே ஜரீனா ரோஷன். இவர் உடல் நலக் குறைவினால் அவதிப்பட்டுள்ளார். மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here