Thursday, May 2, 2024

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நாக்கை அறுத்த கொடூரர்கள்- கொந்தளித்த நெட்டிசன்ஸ்!!!

Must Read

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காமக்கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியும் உள்ளார். அவருக்காக தற்போது சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் போராடி வருகின்றனர்.

“கொடூரமான முறையில் வன்கொடுமை”

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா, 19. இவர் தலித் இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வயலில் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர் இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்பதற்காக அவரது நாக்கினை துண்டித்துள்ளனர். அதே போல் அவரது கழுத்து, முதுகு தண்டுவடம் போன்ற பகுதிகளை பலமாக காயப்படுத்தி உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

manisha in hospital
manisha in hospital

இது செய்தது மட்டும் அல்லாமல் அவரை சாலையில் அப்படியே வீசி சென்றுள்ளனர். அவரை அங்கிருந்த பொது மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

4 who gang raped manisha
4 who gang raped manisha

ஆனால், துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இறப்பதற்கு முன் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் ஒன்றினையும் கொடுத்துள்ளார். இவரது மரணம் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 இளைஞர்ளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெட்டிசன்கள் கொந்தளிப்பு:

இது போல் பல பெண்கள் இந்தியாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இந்த துன்புறுத்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாபர்களில் விஷப்பொருள் கலப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

manisha, victim of the gang rape
manisha, victim of the gang rape

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்துள்ளனர். டுவிட்டரில் #JusticeForHathrasVictim, #JusticeForManisha, #RIPManishaValmiki போன்ற ஹேஷ்டாக்குகள் டிரண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -