பி.சி.சி.ஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி இன்று காலை திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கங்குலி அனுமதி:
சவுரவ் கங்குலி தனது இல்லத்தில் காலை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்து முடித்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அவரது முக்கிய உடல் உறுப்பு செயல்பாடுகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளன. அவரது மனைவி டோனா மற்றும் மூத்த சகோதரர் சினேகாஷிஷ் ஆகியோர் மருத்துவமனையில் கங்குலி உடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.