பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் அதற்குள் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளது. போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையிலும் இல்லாத விதமாக நேற்று சம்பவங்கள் நடந்தேறியது. ஆரிக்கும் பாலாவிற்கு இடையே பல பிரச்சனைகள்ஏற்பட்டது. வீட்டிற்கு வந்த போட்டியாளர்களின் உறவினர்களும் ஆரிக்கு தான் சப்போர்ட் செய்தும் வந்தனர். இதுவே போட்டியாளர்கள் பலருக்கும் கடுப்பானது. எப்படியும் ஆரி தான் ஜெயிக்க போகிறார் என சில கருத்து கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.\
நேற்று சுவாரசியம் கம்மியாக இருந்ததற்காக ஆரி மற்றும் பாலா ஒய்வறைக்கு சென்றனர். ஆரி இந்த வாரம் முழுவதும் அந்த ஃபிரீஸ் டாஸ்கை ஒழுங்காக தான் செய்து வந்தார். அனைவரையும் விட ஆரி தான் அதனை சரியாகவும் செய்தார். அவரின் மகள் வந்தபோது கூட அவர் டாஸ்கில் இருந்து வெளிவரவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்படி இருக்க அவரை எப்படி ஓய்வறைக்கு அனுப்ப முடியும். இதுவே நேற்று பெரிய பிரச்சனையாக வெடித்தது. மேலும் ஆரி பாலாஜியை நாமினேட் செய்ய பாலாஜி அவரை கண்டபடி பேசினார். மேலும் ஆரம்பத்தில் பாலாஜி தான் சோம்பேறி என்று ஆரியை கூறியது. ஆனால் ஓய்வறையில் அவரை சோம்பேறி என்று கூறியதற்காக அவ்வளவு சத்தம் போட்டார்.
என்ன சொல்றதுக்கு நீ யாரு என்று தரக்குறைவாக பேசினார். இது ஆரியின் ரசிகர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வாரத்தில் ஷிவானி, ஆஜித், கேபி, சோம் மற்றும் ரம்யா உள்ளிட்ட 5 நபர்கள் நாமினேஷனில் உள்ளனர். இந்த வாரத்தில் இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது கண்டிப்பாக இந்த வாரத்தில் ஆஜித் தான் வெளியேற போகிறார். போன வாரத்தில் அனிதாவை வெளியேற்ற தான் அஜித்துக்கு ஒட்டு போட்டனர். ஆனால் இந்த தடவை ஆஜித் வெளியேற போவது உறுதியாகியுள்ளது.