தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரங்களில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகத்தில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் 03.01.21 அன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். வரும் 04.01.21 அன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். வரும் 05.01.21 அன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் மேலும் ஏனைய தமிழக மாவட்டங்களில் மற்றும் புதுவை காரைக்கால் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

தனத்தின் கர்ப்பத்தை விழாக்கோலமாக கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – குஷியில் ரசிகர்கள்!!

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

02.01.21 அன்று குமரிக்கடலில் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here